Tuesday, February 13, 2018

'நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கல?'
இந்த கேள்விக்கு அர்த்தம் பெண்களை நாம் அக்கா, தங்கையாக நினைக்க வேண்டும் என்பதாக நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அர்த்தம் அதுவல்ல.
அக்கா, தங்கையோடு பிறந்தவர்களுக்கு ஒரு பெண்ணின் வெளி வாழ்க்கையும், உள் வாழ்க்கையும் தெளிவாக தெரியும். வேலைக்கு போகும் பெண்ணிற்கு அவளுக்கென்றொரு வீடு, உறவுகள், பாசம், கஷ்டம், காதல் என்று பல இருக்கும். அவளின் சுக, துக்கங்கள், வலிகள் எல்லாம் கூட இருந்து பார்த்தால் தான் தெரியும்.
வெளியே மட்டும் பெண்களை பார்ப்பவர்களுக்கு சிரித்து பேசினாலோ, மாடர்ன் ஆடை அணிந்தாலோ அவள் ஒரு வேசியாகத்தான் தெரியும். அதனால் தான் அப்படிப்பட்ட பெண்களை ஈசியாக அடையலாம் என்று முயற்சி செய்து மூக்குடைந்து போகிறார்கள் நம்மில் பல ஆண்கள். அந்த கஷ்டங்கள் தெரிய வேண்டும். அவள் சிரிப்புக்கு பின்னால் இருக்கும் வலிகள் புரிய வேண்டும்.
இதற்காகத்தான், 'நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கல?' என்று கேட்கப்படுகிறது.


#copy

No comments:

Post a Comment

"வெளிநாடு போனவுடன் வீரம் பெற்றவர்களுக்கு சமர்ப்பனம்!! உங்களுக்கு என்ன தான் சிக்கல் இலங்கை வாழ் தமிழர்கள் மீதுஎன்று தெரியவில்லை... ...