Tuesday, February 13, 2018

"வெளிநாடு போனவுடன் வீரம் பெற்றவர்களுக்கு சமர்ப்பனம்!!
உங்களுக்கு என்ன தான் சிக்கல் இலங்கை வாழ் தமிழர்கள் மீதுஎன்று தெரியவில்லை...
வீராதி வீரர்களா நீங்கள்.?
சூராதி சூரர்களா தாங்கள்.?
அத்தனை வீரம் இருந்தால் இங்கே வந்து களமாடி செத்து போய் இருக்க வேண்டியது தானே !,
தாளாத தமிழ்பற்று கொண்டவர்கள் என்றால் தமிழை வளர்க்க உங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுங்கள் போதும்...!!
வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட இராணுவ ஜெனரலை கூக்குரல் இட்டு கத்தி தேவையற்ற கேள்விகளை எழுப்பி சம்பந்தமே இல்லாமல் ஹீரோ ஆக்கி விட்ட பெருமை உங்களையே சாரும்..!!!
சக்தியும் பலமும் கொண்ட நாட்டில் இருப்பதால் தானே அத்தனை கூக்குரல்???
எங்கே தைரியம் இருந்தால் இங்கே வந்துகூவுங்கள் பார்க்கலாம்..!???
அடேய்களா நீங்கள் பேட்டு கோழிகள் என்பதை மறந்து போகிறீர்கள் அடிக்கடி வெள்ளை வேனுக்கு பயந்தும்,,,
சொந்தநாட்டில் உழைக்க துப்பில்லாமலும்,,,,,,
வாழ வழியில்லாமலும்,,,,,,
யுத்த கொடுரத்தில் இறந்து போய் விடுவோம் என்ற அச்சத்திலும்,,,,,,
பொண்டாட்டி கட்டி கொண்டும்,,,,,
கணவனை பெற்று கொணடும்,,,,,,
பறந்தோடி போன பேட்டுகோழிகள் என்பதை மறந்து விடாதீர்கள் மடையர்களே...
உங்களால் தேவை இல்லாமல் உள்நாட்டு சிங்கள மீடியாக்கள் ஒருவரை ஹீரோ ஆக்கி கொண்டிருக்கிறது..!!!
இனி அந்தாள் எலெக்சன் கேட்டு அமைச்சராகி போனாலும் ஆச்சரிய பட இல்லை....
நாம் தான் நீங்கள் இடும் கோழை கோஷங்களுக்கும் பழிக்கடா.!!!!!!
பாலசந்திரன் சுட்டு கொள்ள படும் போதும் '''''
இசைபிரியா கற்பழிக்க படும் போதும் ,,,,,,,
டிரெக்டர்களில் நாயை ஏற்றி செல்வது போல் தமிழர் பிணங்களை ஏற்றி செல்லும் போதும் ,,,,,,,,
எங்கே போய் இருந்தீர்கள் ........??
அட நாமும் : , நம் சொந்தங்களுக்கு செலவுக்கு பணமும் இருந்தால் போதும் என்று வாழ்ந்த புரோயிலர் கோழிகள் உங்களுக்கு என்ன ஒரு கூக்குரல் சத்தம்.!!!!
இங்கே உருப்படியாய் ஒரு கட்சி இல்லை!!!!
தமிழன் ஒருவனை சந்தேக பேரில் கைது பண்ணினால் கூட எடுத்துவிட தமிழில் ஒரு அமைச்சர் கூட இல்லை!!!!.
நீங்கள் பாதுகாப்பாய் இருந்து கொண்டு அங்கே இடும் கூச்சலுக்கு பதில் சொல்ல போவது இங்குள்ள தமிழ் இளைஞர்கள் தான் என்பதை மறந்து போகாதீர்கள்!!!!!
ஏற்கனவே இங்கே அரைவாசி செத்து போய் மிச்ச இளைஞர்கள் தான் உண்டு ...!!!
அவர்களையும் பேட்டு கோழிகள் சத்தம் இட்டு சேவல்கள் வேட்டையாடபட்ட கதையாக்கி போடாதீர்கள்...
யாரும் அங்கே வந்தால் கண்டுகொள்ளாமலும் கணக்கெடுக்காமலும் விடுங்கள்!!!!!
அதுவே தாங்கள் செய்யும் மிகப்பெரும்சேவை!!!!
உங்கள் ஓவர் டைம் போது ஒரு அவசியமற்ற கூக்குரலினை இட்டு இங்கு வாழும் எங்களையும் அசிங்க படுத்தி விடாதீர்கள்
...
......
...........
இறுதியாய்
புரொயிலர் கோழிகளுக்கு நாட்டு சேவலின் எச்சரிப்பு..!!!
சிங்கத்தோடு போராட புலிகள் இல்லை அதனால் பொத்தி கொண்டு இருங்கள் நீங்கள் சத்தம் இட்டால் இனி மிச்ச சேவல்களும் வேட்டையாடப்படும்........
#copy but true
'நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கல?'
இந்த கேள்விக்கு அர்த்தம் பெண்களை நாம் அக்கா, தங்கையாக நினைக்க வேண்டும் என்பதாக நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அர்த்தம் அதுவல்ல.
அக்கா, தங்கையோடு பிறந்தவர்களுக்கு ஒரு பெண்ணின் வெளி வாழ்க்கையும், உள் வாழ்க்கையும் தெளிவாக தெரியும். வேலைக்கு போகும் பெண்ணிற்கு அவளுக்கென்றொரு வீடு, உறவுகள், பாசம், கஷ்டம், காதல் என்று பல இருக்கும். அவளின் சுக, துக்கங்கள், வலிகள் எல்லாம் கூட இருந்து பார்த்தால் தான் தெரியும்.
வெளியே மட்டும் பெண்களை பார்ப்பவர்களுக்கு சிரித்து பேசினாலோ, மாடர்ன் ஆடை அணிந்தாலோ அவள் ஒரு வேசியாகத்தான் தெரியும். அதனால் தான் அப்படிப்பட்ட பெண்களை ஈசியாக அடையலாம் என்று முயற்சி செய்து மூக்குடைந்து போகிறார்கள் நம்மில் பல ஆண்கள். அந்த கஷ்டங்கள் தெரிய வேண்டும். அவள் சிரிப்புக்கு பின்னால் இருக்கும் வலிகள் புரிய வேண்டும்.
இதற்காகத்தான், 'நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கல?' என்று கேட்கப்படுகிறது.


#copy

MAA



Director Sarjun என்றால் எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை. ஆனால் Lakshmi என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது என நினைகின்றேன். ஆம் Lakshmi short film இனுடைய‌ Director தான் Sarjun.
Lakshmi....
பல நெட்டிசன்களின் கருத்துகளுக்குற்ப்பட்ட short film என அனைவரும் அறிந்ததே.
MAA....
27.01.2018 அன்று வெளியான‌ அவருடைய அடுத்த short film. இதில் அவர் பேச வந்த விடயம் தாய்மையும் அவள் உணர்வுகளும், & கலாச்சார சீர்கேடு...
இந்தப் பட‌த்தில் 2,3 dialogues ரொம்பவே ஆழ்மனதை பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. அதில் ஒன்று "பயத்தோடும் வெறுப்போடும் ஒரு உயிரை இந்த உலகத்துக்கு கொண்டு வரக்கூடாது." இன்னொன்று "ஒரு தப்ப செய்றதுக்கு முன்னாடி 10 தடவை யோசிக்கனும் அதே ஒரு பெண்ணாக இருந்தால் 100 தடவை யோசிக்கணும் காரணம் அந்தத் தவறால் வரும் விளைவுக்கு அந்தப் பெண்ணும் அந்தப் பெண்ணின் தாயும் மட்டுமே பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள்."
பொதுவாக இந்த உலகத்தில் ஆண்கள் தவறு செய்தால் அது தவறே கிடையாது ஆனால் பெண்கள் தவறு செய்தால் அது மிகப் பெரிய தவறு. தவறு என்பதற்கு அளவே கிடையாது. ஆணோ பெண்ணோ யார் செய்தாலும் சிறிதோ பெரிதோ தவறு தவறுதான்.
இன்றைய கால கட்டத்தில் ஆணும் பெண்ணும் நண்பர்களாக‌ பழகுவது தவறில்லை. ஆனால் அதே ஆண் நண்பனின் துணை தனியே கிடைக்கையில் இதுதான் காதல் என காமம் என்ற உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு விடுகிறார்கள். இதை இந்தப் படம் மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது. இதில் அக்குழந்தைக்கும் அம்மாவுக்குமான உறவு மிகவும் அழகாக இருக்கிறது. அக்குழந்தை சொல்கிறாள் அம்மா நான் செய்தது தப்புத்தான் என்னை மன்னிச்சுடுங்க எனக் கூற அதை உணரும் பருவத்தில் தாயும் இருக்கிறாள் என்பது தான் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விடயம். இது இன்று பல பெற்றோர்களிடம் இல்லை. தன் குழந்தை தவறு செய்து விட்டால் அத்தவறின் ஆழம் என்ன அது ஏன் தவறு செய்தது அந்தத்தவறை மூடி மறைக்காமல் அந்தத்தவறு பின்நாட்களில் அவர்களின் வாழ்க்கையில் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் படம் எடுக்கப்பட்டுள்ளது.
Lastஆ படத்தின் முடிவில் அந்தப் பையன் விளையாடிகிட்டு இருக்கான் அம்மா பொண்ணுகிட்ட சொல்றாங்க பார் அவனுக்கு இந்த பிரச்சினை என்ன என்று தெரியும். இந்த பிரச்சினையால அவன் வீட்டுல ஒதுங்கி இருக்கல அவன் அவனோட வேலைய செய்றான். நீயும் அத போல செய் ஆனால் அதே தவறை மீண்டும் செய்யாதே உனது பாதையை நோக்கி ஓடிச் செல் இது தான் நான் தரும் பாடம் அப்பிடினு சொல்லி படம் முடியுது.
இந்த படத்தை பார்க்கும் பலர் உடனே....
கையில Camera கிடைச்சா என்ன வேணும்னாலும் படம் எடுப்பீங்களா? எங்க வீட்டுல இப்பிடி நடந்திச்சினா... என தொடங்கி அப்படத்தையே கழுவி ஊத்தும் அளவுக்கு பல ஆர்வக்கோளாறுகளையும் கோபப்பட வைக்கும் கொந்தளிக்க வைக்கும் comment பண்ண வைக்கும்.
ஆனால் Director Sarjun இனுடைய Lakshmi & MAA இரண்டு படங்களுமே என்னைக் கவர்ந்தவை அதனால் தான் இவ்வளவு பெரிய பதிவு.

Friday, December 1, 2017

புத்தகம்


  • ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது "ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா.
  • "கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்" என்றாராம் தந்தை பெரியார்.
  • தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது "புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்" என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு.
  • "என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று" என்றாராம் பெட்ரண்ட் ரஸல்.
  • மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
  • "வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்" என்றாராம் நெல்சன் மண்டேலா.
  • பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்.
  • ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.
  • ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.
  • பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்.
  • தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்.
  • நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன். - ஆபிரகாம் லிங்கன் -
  • ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி! - ஜூலியஸ் சீசர் -
  • உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல். - டெஸ்கார்டஸ் -
  • போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா? ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள். - இங்கர்சால் -
  • சில புத்தகங்களை சுவைப்போம்; சிலவற்றை அப்படியே விழுங்குவோம். சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்! - பிரான்சிஸ் பேக்கன் -
  • புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே! - லெனின் -
  • உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை - ஆஸ்கார் வைல்ட் -
  • உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப்பயிற்சி புத்தக வாசிப்பு! - சிக்மண்ட் -

Wednesday, November 29, 2017


"இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?" என்று எப்போதும் அதிர்வுகளைக் கிளப்பும் ஆளுமை

அடால்ஃப் ஹிட்லர்


பேசப் பேசத் தீராத அசாதரண வாழ்க்கை. எந்த கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம். எதிர் கால தலைமுறையினரையும் நடுநடுங்கச் செய்யும் குரூரம். இத்தனைக் கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் பிரமிப்பை வளர்க்கும் பிறவி-ஹிட்லர்.
சாமானியன் ஒருவன், தேச மக்களின் ஆதரவை, நம்பிக்கையைப் பெற்று, நாஜி என்ற மதத்தை வளர்த்து, தன்னை கடவுளாக வழிபடும் ஒரு பெரும் கூட்டத்தை உருவாக்கி, ஜெர்மனி என்ற மாபெரும் தேசத்தின் தலைவிதியைத் தன் சுண்டு விரலால் எழுதும் வலிமை கொண்ட சர்வாதிகாரியாக சிம்மாசனத்தில் அமர்வது சாதாரண விஷ‌யமில்லை. எனில், அப்போதைய ஜெர்மனியில் ஒரு சர்வாதிகாரிக்கான தேவை இருந்திருக்கிறது. சர்வ வல்லமை கொண்ட ஒரு மீட்பர் வர மாட்டாரா என்று ஜெர்மானியர்களுக்கு ஏக்கமும் இருந்திருக்கிறது.
வளமிக்கக் குடும்பத்தில், பலமானவனாகப் பிறந்தவன் அல்ல ஹிட்லர். தாயின் அன்புக்குக் கட்டுப்பட்டு, இறை பக்த்தியுடன் நல்லொழுக்கம் போதிக்கப்பட்டு வளர்ந்த சாதாரணச் சிறுவன்தான். படிப்பிலும் கெட்டி அல்ல. தலைசிறந்த ஓவியனாக உருவாக வேண்டும் என்ற மென்மையான இலட்சியத்துடன் வளர்ந்த இயல்பான இளைஞனே. ஆனால், ஒரு கட்டத்தில் தூரிகையைத் தூக்கிக் கடாசிவிட்டு, துப்பாக்கியை நம்பி, ரத்தம் தொட்டு குரூரங்களைக் காட்சிப்படுத்தும் கொடுங்கோலனாக மாறியிருக்கிறான் எனில் அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆம், முதலாம் உலகப் போர் முடிவிற்கு வந்தது. ஜெர்மனி தோற்றது. "அனைத்திற்கும் காரணம் ஜெர்மனி" கூறின சர்வதேச உத்தமர்கள்.அடுத்தது என்ன, சுதந்திரமான நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட சர்வதேச சங்கம் (League of Nations) பிறந்தது.உறுவாக்கினார்கள் வெர்செயில்ஸ் ஒப்பந்தத்தை...
ஜெர்மனி தானே குற்றவாளி என்று ஒப்புக்கொள்ளும் படியாக, ஜெர்மனியே அழிந்து போகும் படியாக, அதன் மண்ணாசையை ஒடுக்கும் வகையில், ஜெர்மனியால் ஏற்பட்ட நஷ்டங்களைச் சரி செய்யும் வகையிலான அருமையான ஒப்பந்தம்.
அடேய் ஜெர்மனி வாயை மூடிக் கொண்டு வந்து, கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு போ! - பேரன்புடன் சொன்னது சர்வதேச சங்கம். கையெழுத்திட்டு அகலபாதாளத்தில் விழுந்தது ஜெர்மனி.
உலகால் ஒட்டுமொத்தமாக வஞ்சிக்கப்பட்ட ஜெர்மனி, இந்த உலகையே பழிவாங்கும் காலம் ஒன்று வராதா? ஜெர்மனியனின் வலிமையைக் கண்டு இந்த உலகையே நடுநடுங்க வைக்கும் தலைவன் ஒருவன் வரமாட்டானா?
படிப்பதற்கு சினிமா டயலொக் போல இருக்கலாம். ஆனால், அன்றைக்கு ஒவ்வொரு ஜெர்மானியனும் உள்ளக் குமுறலுடன்தான் உயிர் வாழ்ந்தான். அவர்களுடைய பிரதிநிதிகளுள் ஒருவராக, அந்த பழிவாங்கும் உணர்வின் ஒட்டுமொத்த உருவமாக வந்தார்-அடால்ஃப் ஹிட்லர்.


"வெளிநாடு போனவுடன் வீரம் பெற்றவர்களுக்கு சமர்ப்பனம்!! உங்களுக்கு என்ன தான் சிக்கல் இலங்கை வாழ் தமிழர்கள் மீதுஎன்று தெரியவில்லை... ...